நடைபாதை வியாபாரிகள், சுய உதவிக் குழுக்களுக்கு என்ன உதவி? நிர்மலா அறிவிப்பு!

நடைபாதை வியாபாரிகள், சுய உதவிக் குழுக்களுக்கு என்ன உதவி? நிர்மலா அறிவிப்பு!



கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நடைபாதை வியாபாரிகளின் தொழில் முழுக்க முழுக்க முடங்கியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.





நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்படி, 50 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.5,000 கோடி சிறப்புக் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை ஆரம்பகட்ட மூலதனக் கடன் வழங்க ஒரு மாதத்திற்குள் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும்.

மேலும், சுய உதவிக் குழுக்களுக்காகவும் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் சுய உதவிக் குழுக்கள் சார்பாக முகக்கவசங்கள், சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. சுமார் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்கள் தயாரித்து வழங்கியுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் இவ்வாறாக 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.





Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்