கொரோனா இன்சூரன்ஸ் எடுத்துட்டீங்களா... ?

கொரோனா இன்சூரன்ஸ் எடுத்துட்டீங்களா... ?




ஹெல்த் இன்சூரன்ஸ் - சுகாதாரக் காப்பீடு என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்வில் முக அத்தியாவசியமான ஒன்றாகும். யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலை உள்ளது.அதுவும் கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் சுகாதாரக் காப்பீடு என்பது தனி மனிதருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மிக மிக அவசியமாகும்.



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு அதிகம் என்பதால் மருத்துவக் காப்பீட்டில் கொரோனா சிகிச்சையையும் சேர்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.


அதன்படி, கொரோனா சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்கக்கூடிய வகையிலான மருத்துவ காப்பீடு பாலிசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோருக்கு ஆகும் செலவை ஏற்கும் வகையிலான பாலிசிகளில் கொரோனாவையும் சேர்க்க வேண்டும் என மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆயுள், பொது மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து காப்பீட்டாளர்களும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு கொரோனாவுக்காக குறுகிய கால சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையான இழப்பீடு மற்றும் நன்மைகளை அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.


குறுகிய கால பாலிசிகள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 11 மாதங்கள் வரை வழங்கப்படலாம். அதாவது காப்பீட்டாளர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் மற்றும் 11 மாதங்கள் வரை ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை விற்க முடியும். மேலும் இது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பயனுள்ள வகையில் பாலிசிகளை வழங்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான சுகாதாரத் திட்டங்களில் 30 நாட்களுக்கு எதிராக, 15 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் வழங்க வேண்டும். வாழ் நாள் புதுப்பித்தல், இடம்பெயர்வு, பெயர்வுத் திறன் போன்ற சுகாதார விதிகள் இந்தத் தயாரிப்புகளுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.





Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்