'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தனித் தேர்வுகளுக்கும் இன்று முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும் இவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாணவர்களுக்கு இம்முறை ஹால் டிக்கெட்களுடன் தலா இரண்டு முக கவசங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஜூன் 8, 9 ஆம் தேதிகளில், மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்டங்களுக்கு 45 லட்சத்துக்கும் மேற்பட்ட முக கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீடு தேடி வரும் ஹால் டிக்கெட்:
 முன்னதாக, கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zone) உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 






Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்