ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு! AICTE அறிவிப்பு!

ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு! AICTE அறிவிப்பு!





கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கான எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளை திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்திற்கு மாற்றாக புதிய அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

ஏஐசிடிஇ-யின் புதிய அறிவிப்பில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 30-தேதிக்குள் முடிக்க வேண்டும். தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செப்டம்பர் 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையைச் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பொறியியல் படிப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கலாம் (பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது). புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், இதில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பின்பற்றப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.




Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்