அப்துல் கலாமின் நண்பர் கொரோனாவால் மரணம்!

அப்துல் கலாமின் நண்பர் கொரோனாவால் மரணம்!





நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நண்பர் போஜா கவுடர் கொரோனாவால் உயிரிழந்தார்.


ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர் (90). இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, ஜூலை 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர் ஆவார்.


அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 2006-ல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.




Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்