மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம்
ஈரோடு மாவட்டம் அசோக புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களும் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் எடுக்கப்பட்டது. அதில் மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சலி, இத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் ,குடியுரிமை திருத்தச் சட்டத்தை சிஐஏ கைவிடப்பட வேண்டும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் ,சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைமை நிர்வாகிகள் , முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் கலந்து கொண்டனர்.