ஏழு தமிழர்களை தூக்கிலிட தீர்மானம் போட்டது தி.மு.க.தான் ! முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆவேச பேச்சு!
ஏழு தமிழர்கள் விடுதலையில் நாங்கள்நாடகமாடுவதாக கூறும் திமுக ஆட்சியில்இருந்த போது 7 பேரையும் தூக்கிலிடதீர்மானம் நிறைவேற்றி தண்டனை வழங்கஅறிவுறுத்தியது தி.மு.க.தான் - ஸ்டாலின்வாங்கும் புகாரை கூட சரியாக படிக்கதெரியவில்லை அவர் எப்படி மக்களின்குறைகளை தீர்ப்பார் - திருப்பத்தூரில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திருப்பத்தூர்மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி அருகில் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரைமேற்கொண்டார். அப்போது அவர்பேசுகையில், ஊத்தக்கங்கரைவாணியம்பாடி கூட் ரோடு வரையில் 4வழிசாலையாக்க ரூ.299 கோடியில் பணிகள்நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியஅரசு அதிமுக அரசு. சொன்ன திட்டங்களைஎல்லாம் நிறைவேற்றியுள்ளோம். அதனால்தான் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிறோம்,ஸ்டாலின் எடப்பாடி தினந்தோறும் விளம்பரம்செய்வதாக சொல்கிறார் நாங்கள் செய்ததைசொல்கிறோம் நீங்கள் சட்டமன்றத்திற்குவருவதில்லை. இதையெல்லாம் நீங்களும்மக்களும் தெரிந்துகொள்ளவேபத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுவருகிறோம்.
நாங்கள் உங்களை போல் வாயில் கிழிக்கமாட்டோம் திட்டத்தை நிறைவேற்றுவருகிறோம். அதனால் தான் மக்கள் மீண்டும்எங்களுக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.
7 பேர் விடுதலை பற்றி தவறான செய்தியைஸ்டாலின் பேசுகிறார். கருணாநிதிமுதல்வராக இருந்த போது திமுக 24அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.ஏற்கனவே 7 பேருக்கு தண்டனைநிறைவேற்றலாம் என தீர்மானம்நிறைவேற்றியவர்கள் திமுகவினர். அப்படிதீர்மானம் நிறைவேற்றிவிட்டு இப்போதுஆளுநருக்கு மனு கொடுக்கின்றனர்.
அப்போது உங்கள் தீர்மானப்படி அவர்களைநீங்கள் தூக்கிட்டு இருந்தால் மண்ணோடுமண்ணாகியிருப்பார்கள்.
ஆனால் அம்மா அரசு, அம்மாவின்எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக 7பேர் தண்டனையை ரத்து செய்து தீர்மானம்சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்குஅனுப்பி வைத்தோம்.
ஆனால் திமுக 2000 ஆட்சியில் இருந்த போதுதண்டனையை நிறைவேற்ற தீர்மானம்போட்ட அரசு திமுக அரசு அதனைமறைப்பவர் ஸ்டாலின்.
ஸ்டாலினிடம் உண்மையே வராதுஸ்டாலினுக்கு பொய் பேச நோபல் பரிசுகொடுத்தால் சரியாக இருக்கும். நீயும் வாயாஸ்டாலின் நானும் வருகிறேன் மக்கள்நீதிமன்றத்தில் பேசலாம் மக்களுக்கு நன்மைசெய்ய ஒருபோதும் திமுக துணை நிற்காது.
ஊர் ஊராய் போய் ஸ்டாலின் குறைகளைகேட்பதாக சொல்கிறார், குறையை கேட்டு நீஎன்ன செய்ய போகிறாய்? பெட்டியை சீல்வைத்து எடுத்து கொண்டு போய் ஆட்சிக்குவந்தவுடன் தீர்ப்பதாக கூறுகிறார்.
ஆனால் இன்னும் 100 வருடத்திற்கு ஸ்டாலின்பெட்டியை உடைக்க முடியாது,உள்ளாட்சிதுறை அமைச்சர் துணைமுதல்வராக இருந்த போதெல்லாம் ஸ்டாலின்மக்களை கண்டுகொள்ளவில்லை.கிராமத்தை அடையாளம் காட்டியதே அதிமுகதான் ஸ்டாலின் மந்திரியாக இருக்கும் போதுபார்க்காத கிராமத்தை இப்போது பார்த்துதெரிந்துகொள்ளுங்கள்.
திருப்பத்தூர் மக்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று புதியமாவட்டத்தைஉருவாக்கியது அதிமுக தான். நாங்கள்எங்களின் வாக்குறுதிகள் அனைத்தையும்நிறைவேற்றி வருகிறோம். ஸ்டாலினுக்குஒன்றும் தெரியவில்லை நான் முதல்வராகும்போது ஸ்டாலின் பேசினார் ஒருமாதம் தான்எடப்பாடி முதல்வராக இருப்பார் என்றார்.
இங்கு மக்கள் வெள்ளத்துடன் துணை நின்றுகட்சி நிர்வாகிகள் துணை நின்று இன்று 4ஆண்டுகள் நிறைவு பெறுகிறது 16-2-2021ஐந்தாம் ஆண்டு அதிமுக அடியெடுத்துவைக்கிறது.
வரும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகஹாட் ரிக் வெற்றியை பெறும் ஸ்டாலின்மனு வாங்குகிறார் பொய்யான் செய்தியைசொல்கிறார் ஒருவர் கறவை பசு கேட்டு மனுகொடுத்தால், கணவர் காணவில்லைகண்டுபிடித்து தருகிறேன் என்று கூறுகிறார்.
மக்கள் குறைகளை தெரிவிக்க நாங்கள் 1100என்ற உதவி மைய எண்ணில் மக்கள் புகார்அளிக்கலாம். தேர்தல் வந்தால் ஸ்டாலின்வருவார் அதற்கு பின்னர் மீண்டும் தேர்தல்வந்தால் தான் அவரை பார்க்க முடியும்2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அப்போதுஸ்டாலின் மனு வாங்கி மக்களைஏமாற்றினார்.
ஏமாற்றும் கட்சி திமுக பாம்பையும்கீறியையும் சண்டைக்குவிடுவதாககூறுவார்கள் ஆனால் விடமாட்டார்கள் அதேபோல் ஸ்டாலினும் மக்களுக்கு நன்மைசெய்யும் எண்ணம் கிடையாது எந்தஅளவுக்கு மக்களை ஏமாற்றுகிறார்கள்குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம்ஸ்டாலின் சொல்கிறார்.
அரசு நடவடிக்கை எடுத்து மக்களின்குறைகளை தீர்க்கவில்லை என்று அதிமுகஆட்சியில் சிறப்பு குறைதீர்வு முகாம்கள்நடத்தப்பட்டு மனுக்களை வாங்கிபிரச்சணைகளை தீர்த்துள்ளோம் எடப்பாடிபழனிசாமி அதிமுக பயனடைய பயிர் கடனைரத்து செய்ததாக கூறுகிறார்.
ஆனால் திமுகவினர் தான் அதிகம் இதன்மூலம் பயடைந்துள்ளனர். இந்த அரசுமக்களுக்கு நன்மைகளை செய்து வருவதாகபேசினார் இக்கூட்டத்தில் அமைச்சர்கள்வீரமணி,நீலோபர் கபில் உள்ளிட்ட திரளானஅதிமுகவினர் கலந்துகொண்டனர்.