SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதுகுளத்தூரில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி முகாம்.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் இன்று (28-09-2021) முதுகுளத்தூர் ரோஸ் ஹாலில் அனைத்து நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மௌலவி I. மீரான் முஹைதீன் மன்பஈ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட செயலாளர் நஸீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் , இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா , ACCESS INDIA மாநில ஒருங்கிணைப்பாளர் காதிர் அலி ஆகியோர் முகாமிற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினர். நிறைவாக SDPI கட்சி தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் இன்றைய அரசியல் சூழல் பற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்தான் அவர்கள் நன்றியுரையுடன் முகாம் இனிதே நிறைவுற்றது.