6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

 6,000 ரூபாய் லஞ்சம் : நேர்முக உதவியாளர் கைது!

திருவண்ணாமலை: தடையில்லா சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டான்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் திலோக் சந்துரு, 35. இவருக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு, தடையில்லா சான்று கேட்டு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

சான்று வழங்க, சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், சுந்தர்ராஜன், 54, என்பவன், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டான். பேரத்துக்கு பின், 6,000 ரூபாய் தருவதாக, திலோக் சந்துரு கூறினார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகாரளித்தார்.

போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய, 6,000 ரூபாயை, சுந்தர்ராஜனிடம், திலோக் சந்துரு கொடுத்தார். அதை, சுந்தர்ராஜன் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக கைது செய்தனர்.

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்