ஓசூரில் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து போராட்டம்

ஓசூரில்  பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து போராட்டம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலையை பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் வரவேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. பேரறிவாளனை விடுதலையை கண்டிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என தலைமை அறிவித்தது.

அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒசூரில் காந்திசிலை முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் வாயில் வெள்ளைத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிவாளனின் விடுதலையை ஏற்கமுடியாது இதுபோன்ற விடுதலை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறிவிடும் எனவும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி இதில் மாவட்ட தலைவர் முரளிதரன்

INTUC  குப்புசாமி கீர்த்தி கணேசன் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்