ஓசூர் மாநகர வளர்ச்சி பணிகளுக்காக சென்னை சில்க்ஸ் நிர்வாகம் வழங்கிய 33,33,333 ரூபாய்கள்....!

 ஓசூர் மாநகர வளர்ச்சி பணிகளுக்காக சென்னை சில்க்ஸ் நிர்வாகம் வழங்கிய 33,33,333  ரூபாய்கள்....!

*ஒசூர் மாநகராட்சி, அரசனட்டி பகுதிக்கு கழிவுநீர்கால்வாய் அமைப்பதற்காக நமக்குநாமே திட்டத்தின் கீழ் மக்களின் பங்களிப்பாக 33 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் மாநகர மேயரிடம் வழங்கினர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 16வது வார்டிற்குட்பட்ட சென்னை சில்க்ஸ் முதல் அரசனட்டி வரை கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைப்பதற்கு 1கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 1கோடி ரூபாய் நிதிப்பெற மக்களின் பங்களிப்பாக அரசிற்கு 3ல் ஒரு பங்கான 33,33,333 ரூபாய் செலுத்த வேண்டுமென்கிற நிலையில்

சென்னை சில்க்ஸ் நிர்வாகம் மக்களின் பங்களிப்பை தானே வழங்குவதாக முன்வந்து, 33.33லட்சம் ரூபாய்க்கான காசோலையை

சென்னை சில்க்ஸ்  மேலாளர் குணசேகரன்,துணை மேலாளர் முருகன் ஆகியோர் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா, அவர்களிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன்,  மண்டலக்குழு தலைவர் காந்திமதி கண்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan 

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்