ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்பு...!

 ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்பு...!

*NCC பவள விழாவினையொட்டி, "தேசிய ஒற்றுமையை" வலியுறுத்தி தொடர் ஜோதி ஓட்டமாக ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்*

 NCC பவளவிழாவினையொட்டி, "தேசிய ஒற்றுமையை" வலியுறுத்தி இந்திய ராணுவ K.S.பத்வார் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி கன்னியாகுமாரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி தொடர் ஓட்டத்தை தொடங்கினர்..

தினந்தோறும் 50கிமீ தூரத்தை ராணுவ கர்ணல் ஓட்டம் மேற்க்கொண்டு வரும்நிலையில், இன்று காலை

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பகுதியிலிருந்து கர்ணல் பத்வார் ஓட்டத்தை தொடங்கி ஒசூர் வழியாக தமிழக - கர்நாடகா மாநில எல்லை அத்திப்பள்ளிக்கு வருகை தந்தார் அப்போது ஜூஜூவாடி பகுதியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி வரவேற்றனர்..

பின்னர் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்று வழி அனுப்பி வைத்தார்.. ராணுவ கர்ணல் K.S.பத்வார் கர்நாடகா மாநில எல்லைக்குள் ஜோதி ஏந்தி புறப்பட்டார்

வருகிற ஜனவரி மாதம் 18ம் தேதியன்று புதுடெல்லியில் தொடர் ஓட்டம் நிறைவடைய உள்ளது

 ஓட்டத்தை தொடங்கிய ராணுவ கர்ணல் K.S.பந்துவார் அவர்கள் இன்று தமிழக மாநில எல்லை ஜூஜூவாடி பகுதிக்கு வருகை தந்த நிலையில் மாணவர்கள்,ராணுவ அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, தகவல் தொழில் நுட்ப அணியை சார்ந்த வடிவேல், கலைவாணன் மற்றும் பொதுமக்களுடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan 

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்