ஆறு வயதில் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு....!

 ஆறு வயதில் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு....!

1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. 6 வயது முடிந்த பிறகு 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

3 வயதில் பிரி - பிரைமரி வகுப்பில் சேர்க்கலாம், 3 ஆண்டுகள் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் தொடக்க கல்வி பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் கல்வி ஆண்டில் இருந்து இந்த முறை கட்டாயப்படுத்த படுகின்றது.

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்