விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

 விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் செய்ய முயன்ற 200க்கும் மேற்ப்பட்டோர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி,நாகமங்கலம்,அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3800 ஏக்கர் நிலப்பரப்பில் 5வது சிப்காட் அமைக்க தமிழக அரசு விளைநிலங்களை கையகப்படுத்தி வரும் நிலையில்

இதனை கண்டித்து விவசாயிகள்  58வது நாளாக உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்,

 இன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்க்கொள்வதாக அறிவிப்பு விவசாயிகள் அறிவிப்பு செய்திருந்தநிலையில் 250 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.. போலிசார் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

விவசாயிகள்,பெண்கள்  அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்க்கொண்டபோது போலிசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் திடீரென ஒசூர் - இராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

பின்னர் போலிசார் 200க்கும் மேற்ப்பட்ட விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றியபோது விவசயி ஒருவர் காவல் வாகனத்தின் டயரில் தலை வைத்து படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது

கைது செய்த 200க்கும் அதிகமானோர் தனியார் மண்டபத்திலஃ தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

B. S. Prakash 

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்