போட்டித்தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

 போட்டித்தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

போட்டித்தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல, இந்த கல்வியாண்டிற்கான போட்டித்தேர்வு குறித்த பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்த மாதத்தில் இருந்து பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT- Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET – All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID – National Institute of Design – Design Aptitude Test ) மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED- Undergraduate Common Entrance Examination for Design) ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான அனைத்து தகவல்களையும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்