மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

 மத்திய அரசின் சோலார் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் சோலார் பேனல் திட்டத்தில் விண்ணப்பித்து, பொதுமக்கள் மானியம் பெறலாம் என, தர்மபுரி மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில், ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு, 60,000, 3 கிலோ வாட்டுக்கு, 78,000 ரூபாய் மத்திய அரசால் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படும். திட்டப்பணிகள் முடித்த, 7 நாட்களிலிருந்து, 30 நாட்களுக்குள் இத்தொகை வழங்கப்படும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல், ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, www.pmsuryaghar.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்