கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

 கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் - 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடபட்டது. கிருஷ்ணகிரியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரயு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வேனில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், மாவட்ட போலீசார், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

 இதன் பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வென் புறாக்களையும், வண்ண பலூன்களையும்  பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர், தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தோட்டக்கலை, வேளாண்மை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். பின்னர் கடந்தாண்டில் சிறப்பாக பணியாற்றிய  அனைத்து துறைகளின் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டது. பின்னர் பள்ளி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

K. Moorthy Krishnagiri Reporter