76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு ஏற்றி வைத்து   காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

*கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு ஏற்றி வைத்து   காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.*

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு கொடி கம்பத்தில் நமது தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

 இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையுடன்,ஆட்சியர் சரயு ஏற்றுக்கொண்டார்.

 பின்னர் நாட்டின் சமதானத்தை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலுன்களையும் வான் நோக்கில் பறக்கவிட்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு பதக்கம் பாராட்டு சான்றிதழ்களும்

வழங்கி 45  நலிந்தோர்க்கு சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 இந்த சுதந்திர தின விழாவில் அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்