3000 கொடுத்து Fastag வாங்கினால்.. வருடம் முழுவதும் பயணம் செய்யலாம்.....!?

 3000 கொடுத்து Fastag வாங்கினால்.. வருடம் முழுவதும்  பயணம் செய்யலாம்.....!?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்க ரூ.30,000க்கு லைஃப் டைம் இலவச பாஸ் பெறும் வசதியை விரைவில் மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல 3000 ரூபாய்க்கு ஒரு வருட ஆஃபரும் தரப்போகிறார்களாம்.

இப்படி செய்வதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்களையும், வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் குறித்த நெருக்கடிகளையும் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் என்டிடிவி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடி கட்டணங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், இந்த புகார் மீது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் பயணிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில் மாற்றம் வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. மாதம் ரூ.340 என்று இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.4,080 வருகிறது. இந்த தொகையை செலுத்திவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை எத்தனை முறை வேண்டும் என்றாலும் கடந்து செல்லலாம்.

ஆனால் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், ஆதே நேரம் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான தீர்வுக்கு முயன்று வந்தது. அதன்படி இனி பயணிகளின் வசதிக்காக ஆண்டு கட்டண நடைமுறை கொண்டுவரலாம் என யோசித்து வருகிறது.

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடியை கட்டணமின்றி கடந்துக்கொள்ளலாம். அதேபோல ரூ.30,000 செலுத்தினால் 15 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இலவசமாக கடந்து செல்லலாம் என்கிற ஐடியாவை நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சகம் யோசித்து வருகிறது. இதற்கான முன் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், இது விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி செய்வதன் மூலம் கார் ஓனர்களுக்கு இரண்டு விஷயங்களில் பலன் கிடைக்கும். ஒன்று, முந்தைய கட்டணத்தை விட இதில் கட்டணம் குறைவு. இரண்டாவது சிக்கலற்ற பயணம் சாத்தியமாகும். பஸ், லாரி போல தினமும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு இது பெரும் நன்மையாகும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. 


Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்